திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் இனிகோ இருதயராஜ் தனது தொகுதி பகுதியான சந்தியாகப்பர் பாளையம், முதலியார் சத்திரம், மற்றும் வேர் ஹவுஸ் ரெட்ட பிள்ளையார் கோயில் தெரு .பாலக்கரை பிரதான சாலை , ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். வாக்கு சேகரிப்பில் பொதுமக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டுமென கோரிக்கை வைத்தனர். தேர்தலில் தனது வெற்றிக்கு பிறகு இலவச வீட்டு மனை பெற்று தருவதாக உறுதியளித்தார். நிகழ்வில் திராவிட முன்னேற்ற கழக கிழக்கு மாநகரச் செயலாளர் மதிவாணன்,, மதிமுக செயலாளர் வெல்லமண்டி சோமு "கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர் .



No comments:
Post a Comment