சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 15 தொகுதிகளில் முத்தரையருக்கு வாய்ப்பளித்திட வேண்டும் - தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் தலைவர் அம்பலத்தரசு பேட்டி - tamilkalam

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, February 10, 2026

சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 15 தொகுதிகளில் முத்தரையருக்கு வாய்ப்பளித்திட வேண்டும் - தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் தலைவர் அம்பலத்தரசு பேட்டி

 10.2.2026 இன்று 

திருச்சியில் தமிழ்நாடு முத்தரையர் சங்கங்கத்தின் தலைவர்   அம்பலத்தரசு பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் கூறியதாவது



        முத்தரையர் எவரும் இதுவரை மாநிலங்களவை உறுப்பினர் பதவி வகித்ததில்லை என்றும் இனிவரும் காலங்களில் காலியாகும் மாநிலங் கலவை பதவி இடத்தில் முத்தரையர் ஒருவருக்கு பதவி வாங்கி பெருமைப்படுத்த வேண்டும் என்றும் தகுதியுள்ள முத்தரைய அரசு அதிகாரிகளுக்கு கன்ஃபேடு ஐஏஎஸ் பதவி வழங்கும் படியும் ." தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையதிற்கு முத்தரையர் ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்றும் திருச்சி நகரப் பேருந்து நிலையத்திற்கு மறைந்த முப்பெரும் காங்கிரஸ் தலைவர் அண்ணாமலை முத்துராஜா அவர்களின் பெயர் வைக்க வேண்டும் என்றும்,..... வல்லம் கோட்டை பகுதியை தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் அங்கு பெரும்பிடுகு முத்தரையர்  மணிமண்டபமும் அகல் வைப்பாகவும் அமைக்க வேண்டும் என்றும் ,---- மாமன்னர் சுவரன் மாறனின் கோ நகரமான நியமம் , செந்தலை, நாகத்தி மற்றும் வல்லம் ஆகிய ஊர்களில் அகழாய்வு செய்து அரசனை தொல்பொருள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் , கரூர் மாவட்டம் தேவர்மலை அருகே குடிவண்டை கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் மலையில் உள்ள பாண்டி முத்தரையர் கட்டிடக்கலை காலேச்சுரம் கோயிலை தொல்லியல் துறை ஆய்வு செய்து புனரமைப்பு செய்திட வேண்டும் என்றும் ,.... திராவிட இயக்கங்களின் தொடக்க கால தலைவர்களில் ஒருவரும் சட்டமேலவை முன்னாள் தலைவருமாகிய    சி.பி. சிற்றரசு அவர்களின் பெயரால் தமிழக விடுதலை வழங்கிட சட்டசபையில் ஜிபி சிற்றர்ஸின் திருவுருவப்படத்தை திறந்து வைக்கவும் மாண்புமிகு கழக தலைவரும் முதலமைச்சர் அவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ,   சேர்முக சென்னையில் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருவருவுச்சிலை அமைத்திட வேண்டும் என்றும் சென்னப்ப நாயருக்கு திருவுருவ சிலை அமைத்திட வேண்டும் என்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த சொல்ல அரசு குழு செல்லையா அவர்களின் திருஉருவப்படத்தை சட்டசபையில் திறந்து வைக்க வேண்டும் என்றும்,  கேட்டு கொண்டார். மேலும் அரசாணை எண் 15 பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நாள் 22 6 1986 இல் முத்தரையர் அனைவரையும் முத்தரையர் என்று பொதுப்பெயரால் அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது இந்த ஆணையில் உள்ள அவரவர் அனுபவிக்கும் சலுகைகள் தொடரும் என்ற நிபந்தனையை நீக்கி அனைவருக்கும் ஒரே சலுகை அளித்திட வேண்டும் என்றும்     திருப்பட்டூர் நலத்துறையின் சாதி பட்டியலில் முத்து ராஜா முத்திரையர் ஆகிய பிரிவினரின் பிற்பட்டோர் பெருவிலும் அம்பலகாரர் வலையர் ஆகியோரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலிலும் சேர்வை வலையர் ஆகியோர் சீர் மரபினர் பட்டியலிலும் உள்ளனர் வரையறு பிரிவினர் மிகவும் பிற்பட்டோர் சீர் மரபினர் ஆகிய இரண்டு பட்டியலிலும் உள்ளனர் .... மேற்கூறிய முரண்பாடுகளை நீக்கி உள்பிரிவுகளில் உள்ள அனைவரையும் தீர் மரபினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .. மேலும் அவர் கூறும் போது முத்தரையர் 50 தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ளனர் ஆகவே சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 15 தொகுதிகளில் முத்தையாருக்கு வாய்ப்பளித்திட வேண்டும் என்றும் தென் மாவட்டங்களில் முத்தரையர் தொகுதிகளில் முத்தரையர்கள் தேர்தல் நிற்பதற்கு வாய்ப்பு அளித்திட வேண்டும் என்றும் ''   தமிழ்நாடு முத்தரையர் சங்கத்திற்கு ஆறு தொகுதிகளில் போட்டியிட  தங்கள் கூட்டணியில்  வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் முத்தரையர் பெரும்பான்மையான உள்ள டெல்டா மாவட்டங்களில் முத்தரைய மகளிருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் "  மேலும் அவர் பேசும் போது தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக முத்தரையர் இன கல்வியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் பள்ளி மற்றும் கல்லூரி வரலாற்று பாட நூல்களில் சேர சோழ பாண்டிய வரலாற்றை போன்று முத்தரையர் வரலாற்று பாடமாக சேர்த்து விட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் ... தமிழ் புலவர்களால் பாடம் பெற்றவர் பேரரசர் சுவரன் மாறன் அவரைப் பற்றிய வரலாறை பள்ளி கல்லூரி பாட நூல்களில் சேர்த்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் .

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages