திருச்சியில்
பித்தளை பொருட்கள் திருட்டு,
திருடிய 2பேர் கைது
திருச்சி பாலக்கரை பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக பித்தளை சாமான் கடை நடத்தி வருபவர் அய்யனார் (76). தற்போது கடையில் குமார் என்ற வாலிபர் வேலை செய்து வருகிறார். கடைக்கு பித்தளை பொருட்கள் வாங்க நுகர்வோர் வந்திருந்தனர் .அப்போது பொருட்களை வாங்குவது போல நடித்து அவற்றை திருடி சென்றனர் .இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து பாலக்கரை கூனி பஜாரை சேர்ந்த ரவீந்திரன் ( 20 ) உள்பட இரண்டு வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டது.
No comments:
Post a Comment