9.2.2026
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 2ல். கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது......
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி திருச்சி மாநகராட்சி மண்டலம் இரண்டில் கோட்டத் தலைவர் ,, உதவி ஆணையர் ,, உதவி செயற்பொறியாளர், நிர்வாக அலுவலர், மற்றும் மாநகராட்சியில் பணிபுரியும் அனைவரும் இணைந்து கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை வாசித்து ஏற்று கொண்டனர்.
அரசமைப்பு சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் வினையத் தொகைகளை வழங்கி கட்டாய பணிக்கு வற்புறுத்துவதும், தண்டனைக்குரிய குற்றமாக வரைமுறை செய்யப்பட்டுள்ளது... கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திட வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தை கருத்தில் கொண்டு சமுதாயத்தை விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும்... கொத்தடிமை தொழிலாளர் முறையை எந்த தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்ச்சி செய்வேன் என்றும் '' எந்த வகை தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணி அமர்த்துவதை தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும், கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காக பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசமைப்பு சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கும், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் பணியாற்றுவேன் என்றும், உளமார உறுதி கூறுவதாக அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் .....

.jpeg)
No comments:
Post a Comment