திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) மாணவர்கள் 3 பேர் நீட் யுஜி 2026 தேர்வில்
சிறந்த தரவரிசை பெற்றுள்ளனர்.
:நாட்டின் முன்னணி தேர்வுப் பயிற்சி நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) திருச்சியில் உள்ள தனது வகுப்பறைப் பயிற்சி மாணவர்களில் 3 பேர் தேசிய தகுதித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வான நீட் யுஜி (NEET UG) 2026 தேர்வில் சிறந்த தரவரிசைகளைப் பெற்றுள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளது.
இந்த சிறப்பான சாதனை, மாணவர்களின் தொடர்ச்சியான கடின உழைப்பு. உறுதியான குறிக்கோள் மற்றும் ஒழுக்கமான பயிற்சியின் பிரதிபலிப்பாகும். இதற்கு ஆகாஷ் வழங்கிய கல்வி வழிகாட்டுதல் மற்றும் கட்டமைக்கப்பட்ட கற்றல் சூழலும் முக்கிய காரணிகளாக இருப்பதாக தெரிவித்தனர.
மாணவர்களில் யாழினி மணிவண்ணன் அகில இந்திய தரவரிசையில் (AIR) 777-வது இடத்தை பெற்று முதலிடம் பிடித்தார். அவரைத் தொடர்ந்து கௌதம் வெங்கடேஷ் AIR 1097-வது இடத்தையும், தக்ஷின் நாகராஜ் எஸ்.ஏ. AIR 1678-வது இடத்தையும் பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளனர்.
சாதனை தன்மையை நீட் யுஜி 2026 தேர்வில் சிறப்பான முடிவுகளைப் பதிவு செய்ததன் மூலம்.. மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியில் இந்தியாவின் மிகவும் நம்பகமான கல்வி நிறுவனமாக ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) மீண்டும் தனது முன்னணி இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு, ஆகாஷ் மாணவர்களில் 4 பேர் அகில இந்திய தரவரிசையில் முதல் 10 இடங்களிலும், 18 மாணவர்கள்முதல் 50 இடங்களிலும், 41 மாணவர்கள் முதல் 10 இடங்களிலும் இடம்பெற்று தொடர்ந்து சிறப்பான வெற்றியைநிகழ்த்தியுள்ளனர். இந்த குறிப்பிடத்தக்க வெற்றி, AESL நிறுவனத்தின் கல்விசார் சிறப்பிற்கான நீண்டகால பாரம்பரியம், மற்றும் ,மாணவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை, அனுபவமிக்க ஆசிரியர்கள், விரிவான பாடப்பொருள், கடுமையான தேர்வு முறை மற்றும் தனிப்பட்ட வழிகாட்டுதல். ஆகியவற்றின் மூலம் நாடு முழுவதும் தொடர்ந்து உயர்தர மருத்து நுழைவுத் தேர்வு சாதனையாளர்களை உருவாக்கி வரும் திறனை மீண்டு வெளிப்படுத்தியுள்ளது.
வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
"நீட் யுஜி 2026 தேர்வில் சிறந்த தரவரிசை பெற்றது எங்களின் நீண்டநாள் கனவு நனவாகிய தருணமென்று கூறினர்.எங்கள் மீது எப்போதும்
நம்பிக்கை வைத்து உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும். தொடர்ந்து வழிகாட்டி ஊக்கமளித்த ஆகாஷ் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்எனவும் தெரிவித்தனர்.
வழக்கமான மாதிரித் தேர்வுகள், விரிவான செயல்திறன் மதிப்பீடுகள், சந்தேகங்களுக்கு உடனடி தீர்வு வழங்கும் அமர்வுகள்,, மற்றும் ஒழுங்குமுறையுடன் நடைபெற்ற வகுப்பறைப் பயிற்சிகள் ஆகியவை எங்களின் அடிப்படைக் கருத்துக்களை வலுப்படுத்தி, தேர்வுத் தயாரிப்பு முழுவதும் கவனத்துடன் செயல்பட தங்களுக்குஉதவியதாகவும்,'இந்த வெற்றி, எதிர்காலத்தில் ஒரு சிறந்த மருத்துவராக உருவாக இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் உழைக்க எங்களுக்கு ஊக்கமளிக்கிறது" என்றும் கூறினர்.
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) துணை மண்டல இயக்குநர் டி. சிவா பிரசாத் கூறுகையில்,
"மாணவர்களின் இந்தச் சாதனை, ஆகாஷ் குடும்பம் முழுவதற்கும் பெருமையான தருணமாகும். அவர்களின் ஒழுக்கம், தொடர்ச்சியான முயற்சி மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆகியவை தேர்வுத் தயாரிப்பு முழுவதும் அவர்களை தனித்துவமாக வெளிப்படுத்தியது. இந்த சிறப்பான வெற்றிக்காக மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை எட்டி, சிறந்த மருத்துவர்களாக நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார் .
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL)-இன் ஒருங்கிணைந்த கற்றல் அமைப்பு, அனுபவமிக்க ஆசிரியர்கள், அறிவியல் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பாடப்பொருள், தொழில்நுட்ப ஆதரவுடன் கூடிய கற்றல், வழக்கமான மதிப்பீட்டுத் தேர்வுகள், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் தனிப்பட்ட வழிகாட்டுதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, நீட் போன்ற கடுமையான போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்க உதவுகிறது.நாடு முழுவதும் பரந்து விரிந்த தனது பயிற்சி மையங்கள் மற்றும் டிஜிட்டல் கற்றல் தளங்கள் மூலம், AESL ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மருத்துவ நுழைவுத் தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டி, அவர்களை ஊக்குவித்து வருகிறது.



No comments:
Post a Comment