திருச்சியில் மாவட்ட. ஆட்சியரிடம் மனு:
கோழி உற்பத்தி நிறுவனங்கள் கடைகளுக்கு தீவனத்துடன் உயிர் கோழிகளை அனுப்புவதால் இறைச்சியின் தரம், உணவு பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு அறிவுறுத்தியபடி கோழிகளுக்கான தீவன கட்டுப்பாட்டை போலி உற்பத்தி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் அதை அரசு முறையாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தி மலைக்கோட்டை கறிக்கோழி மொத்த வியாபாரிகள் நல சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 31ஆம் தேதி முதல் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.


No comments:
Post a Comment