.
'திருச்சி மேற்கு தொகுதி திமுக தேர்தல் பணிமனை அலுவலகம் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
திருச்சி
திருச்சி மாவட்டம், மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் (திமுக) தேர்தல் பணிமனை அலுவலகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு புதிய தேர்தல் அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, மறைந்த தலைவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர்தூதிமரியாதைசெலுத்தினார்.
இதனை தொடர்ந்துகூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, தேர்தல் பணிகளை துரிதப்படுத்துவது குறித்து அறிவுறுத்தினார்.இந் நிகழ்வவில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


No comments:
Post a Comment