திருச்சியில்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர் மரணம்.
நாமக்கல் மாவட்டம் ஆர்.சி.புதூர் குட்டை தெருவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (60). இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு ஆலயத்தில் உதவி செயல் பொறியாளராக வேலை செய்து வந்தார். இதய கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் மேலும் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று அவர் அலுவலகத்தில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக சக அலுவலர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment