கருமண்டபம் பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்
திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் கழக தோழர்களுடன் இணைந்து வாக்கு சேகரித்தார்.
கருமண்டபம், ராம்நகர்,
விசுவாஸ் நகர் , ஆர்.எம்.எஸ் காலனி, ஆல்ஃபா நகர், ஜே.கே நகர், காவிரி நகர், ராம்ஜி நகர், மில் காலனி, கீதா நகர் ,அம்மையப் பிள்ளைநகர், லாவண்யா கார்டன், எம் எம் நகர், சண்முகா நகர், ரங்கா நகர், கொடாப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் அமைச்சர் நேருவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சாரம் சென்ற இடமெல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வழிநெடுகிலும் திரண்டு நின்று அமைச்சருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் ஆரவாரத்துடன் அவருக்குப் பொன்னாடை அணிவித்தும், மலர் தூவியும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
இந்த பிரச்சாரத்தின் போது தோழமைக் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும்கலந்து கொண்டனர்.



No comments:
Post a Comment