19.2.2026
திருச்சி. தமிழ் மாநில காங்கிரஸ் சட்டமன்ற தேர்தல் 2026 டெல்டா மண்டல,. மாவட்ட, தலைவர்கள், நிர்வாகிகள். கலந்தாய்வு கூட்டம் திருச்சி தனியார் ஓட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் G.K. வாசன் அவர்கள் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை ஆசிய மாவட்ட நிர்வாகிகள், தலைவர்கள். கலந்துகொண்டனர். G.K. வாசன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பும் நட ந்தது.
மேலும் அவர் பேசியபோது தே.மு.தி.க. கட்சியின் தலைவர் விஜயகாந்த் இருக்கும் வரை தி.மு.கவுடன் எந்தவிதமான தேர்தல் கூட்டணியும் வைக்க வில்லை. ஆனால் தற்போது முற்றிலும் மாறாக தி.மு.க& தே.மு.தி.க. என்கிற பொருந்தா கூட்டணி அமைத்தள்ளதாகவும், கடந்த ஐந்தாண்டுகளாக ஆளும் திராவிட மாடல் அரசு மக்களுக்கு எவ்வித நல்லாட்சியும், தராமல், தேர்தல் வாக்குறுதி களையும் நிறைவேற்ற வில்லை என்றும்., ஆனால் ஒன்றிய ப.ஜா.க.வின் மோடி அரசு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை , தந்துள்ளதாகவும், ஆதலால் தமிழக மக்கள் பெரும்பயன் ,அடைந்துள்ளதாகவும் கூறினார். தமிழகமெங்கும் சாலை. போக்குவரத்தில் உள்ள சாலைகளில் எங்கு சென்றாலும் குண்டும், குழிகளாகவும் மேடு, பள்ளங்களாகவும் உள்ளதாக.பேசினார்.
ஆளும் திராவிட முன்னேற்ற கழக அரசின் மீது மக்கள். கடுமையான, எதிர்ப்பிலும், அதிர்ப்பிதியிலும் தமிழக மக்கள் இருப்பதாக கூறினார்.
காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் கடுமையான கோஸ்டிப் பூசல், தலைமையே இல்லாதது போல் உள்ளதாகவும் கூறினார்.


No comments:
Post a Comment