ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் நிறுவனர்,சமூக போராளி தோழர் சம்சுதீன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம். 28.08.26 மாலை 6 மணி அளவில் DLF தில்லை நகர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நினைவேந்தல் கூட்டத்தை ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில தலைவர் தோழர் செந்தில் ( DLF) தலைமை ஏற்று நடத்தினார்.
தோழர் சம்சுதீன் படத்திற்கு மலர்கள் தூவியும், ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் தோழர் சம்சுதீனை பற்றி சமூக நல கூட்டமைப்பு தோழர்கள் உரையாற்றினார்.
இக்கூட்டத்தில்
ஐயா சின்னதுரை தலைவர் தமிழக விவசாயிகள் சங்கம் கட்சி சார்பற்றது.
மூத்த வழக்கறிஞர் தோழர் கென்னடி.
ரெட் பிளாக் கட்சியின் மாநில தலைவர் தோழர் AC. ராமலிங்கம்.
தோழர் விடுதலை விக்கி
விடுதலை சிறுத்தை கட்சி.
தோழர் ராயல் ராஜா மாவட்டத் தலைவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
கோபிநாத் பத்திரிக்கையார்.
M.P செல்வம் தேசிய மருதம் மக்கள் முன்னேற்ற கழகம்.
சாமானிய மக்கள் கட்சி மத்திய மண்டல செயலாளர் தோழர் ஜோசப்.
தோழர் கமலக்கண்ணன் மாவட்ட செயலாளர் தந்தை பெரியார் திராவிட கழகம்
தோழர் வின்சென்ட் மாநகர தலைவர் தந்தை பெரியார் திராவிட கழகம்.
தோழர் ஆனந்த் ( DLF)மாநில இணைச் செயலாளர் ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தோழர் சீனி விடுதலை அரசு மாநில கொள்கை பரப்பு செயலாளர் தந்தை பெரியார் திராவிட கழகம்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.
வழக்கறிஞர் ரஞ்சித்.
தோழர் பஷீர் மக்கள் உரிமை இயக்கம்.
தோழர் தில்லை முரசு தொண்டர் அணி மாநில துணை செயலாளர் விடுதலை சிறுத்தை கட்சி.
தோழர் முபாரக் மாநில பொது செயலாளர் நாம் திராவிட முன்னேற்ற கழகம்.
வழக்கறிஞர் கமுர்தீன்.
தோழர் ரமணா மாவட்ட செயலாளர் தமிழ் புலிகள் கட்சி.
ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜீவா( DLF) சிறப்புரையாற்றினார்.
சமூக ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள், தோழமைக் கட்சி தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இறுதியாக முத்து திருச்சி மண்டலம் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் நன்றி உரையாற்றினார்.


No comments:
Post a Comment